கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.
மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும் நவம்பர் ஒன்று முதல் நேரடி வகுப்புகள் மற்ற வகுப்புகளுக்கு தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில்,மாணவர்களுக்கான ஒரு அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில்,அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்தூர் ஒன்றியத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், காளையார்கோவில், மானாமதுரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் !