மக்களுக்கு எதிராகவே மோடி அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது – புதுவை முதலமைச்சர் !

புதுவை முதலமைச்சர் நாராயண சாமி திருவாரூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியது,பிரதமரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற சர்வாதிகார ஆட்சி மத்தியில் நடப்பதாக அவர் பிரதமர் மீது குற்றம் சாட்டினார்.

நாட்டில் விவசாயிகள் மட்டும் இன்றி யார் போராட்டம் நடத்தினாலும் அதை பற்றி கவலை பட கூடாது என்ற கொள்கையை மோடி அரசு வைத்துள்ளது.மக்களுக்கு எதிராகவே மோடி அரசு திட்டங்களை செயல் படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கேள்விக்கு ,பாரத் பெட்ரோலியம்,காப்பீட்டு துறை,வங்கிகள் உள்ளிட்ட அணைத்து பொது துறை நிறுவனங்களையும் தனியாருக்கு கொடுத்தால் அரசாங்கத்தை எப்படி நடத்த முடியும் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.