நடிகர் சூர்யாவுக்கு கரோனா பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி !

நடிகர் சூர்யாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று கூறியுள்ளார்.