4 மாவட்டங்களில் மட்டும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி

கொரோனா பரவல் அடிப்படையில் மாவட்டங்களை மூன்று வகைகளாக தமிழக அரசு பிரித்துள்ளது. இதில் மூன்றாவது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மூன்றாவது வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் பொது போக்குவரத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இந்த மாவட்டங்களில் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.