பிரியங்கா காந்தியின் கணவருக்கு கரோனா தொற்று !

தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் நாளை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை.

எனினும், டாக்டர்களின் அறிவுரைப்படி அவரும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் தனது பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

அசாம் மாநிலம் கோல்பாரா, கோலக்கஞ்ச், கயாகுச்சி ஆகிய இடங்களில் இன்று அவர் பிரசாரம் செய்வதாக இருந்தது.மேலும் தமிழக பிரசாரமும் ரத்து செய்யப்பப்பட்டுள்ளது.