பாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரங்கள்

அசாமில் கரீம்கஞ்ச் பகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் காரில் வாக்களிக்கும் இயந்திரமான ஈவிஎம் இயந்திரங்கள் இருந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.

பணத்தைக் காரில் கொண்டு வந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க காரில் இருந்தவர்கள் தங்களுக்கும் பணத்திற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கார் பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணேந்துவுடையதுதான் என்பதற்கு தேர்தல் சொத்து கணக்கு விவரத்தில் இவர் தனக்கு ஒயிட் பொலீரோ இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியது. இதனையடுத்து 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்