சென்னை: வருகின்ற மார்ச் 9ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் (Admk District Secretaries Meeting கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாகவும் விரிவாக) பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி தொடர்ந்த வழக்கு பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.