Dgp Sylendra Babu Explained: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: டி.ஜி.பி. எச்சரிக்கை

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் (Dgp Sylendra Babu Explained) குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என்று வதந்தி பரப்பிய நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது போன்ற தாக்குதல் நடைபெறவில்லை. மேலும் வட மாநில தொழிலாளர்களிடம் அவர்களின் தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரையில் எவ்வித புகாரும் வரவில்லை. அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். வடமாநில மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று நம்பிக்கை அளிக்கிறோம்.

வதந்தி தொடர்பாக வட மாநில டி.ஜி.பி.க்களுடனும் பேசியுள்ளேன். பீகார் குழு ஆய்வு செய்யும்போது மேலும் நம்பிக்கை அதிகரிக்கும். வட மாநிலத்தவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டி.ஜி.பி. கூறியுள்ளார்.