ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக சென்னை வருகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். அவர் வருகிற 9-ந்தேதி மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

10-ந்தேதி காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு செல்கிறார். பின்னர் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை சென்னை திரும்புகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

11-ந்தேதி காலை சென்னை அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிற்பகலில் தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.