தேர்தலில் தனித்து போட்டி போடும் என்.ஆர்.காங்கிரஸ்

கட்சி புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிட வேண்டும் என என் ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதன் தலைவர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக காட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் வழங்குவதில் பாஜக தாமதப்படுத்தி வருகிறது.

இது குறித்து விவாதிக்க என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் கட்சியின் தலைவர் ரங்கசாமியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.