ஹைட்டி அதிபர் ஜோவெனல் மோயிஸ் சுட்டுக்கொலை !

ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் புதன்கிழமை அதிகாலையில் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் புறநகரில் உள்ள அவரது வீட்டில் நடந்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்று அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் அவர் குடியிருப்பு வளாகத்தில் நடந்துள்ளது.இந்த தாக்குதலில் அவரது மனைவி பலத்த காயம் அடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த தாக்குதலில் ஸ்பானிஷ் மொழி பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.