கர்நாடக துணை முதல்வர் மகனின் கார் மோதி விவசாயி ஒருவர் பலி !

tn news : கோர விபத்து ..பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து !
tn news : கோர விபத்து ..பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து !

கர்நாடக துணை முதல்வர் லட்சுமன் சவதியின் மகன் சிதானந்தின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.ஹனுகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் கூடலசங்கமா அருகே இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த ஹனுகுண்ட் போலீஸார், சிதானந்தின் காரைபறிமுதல் செய்தனர். உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து வாகனத்தின் ஓட்டுநர் ஹனுமந்த் சிங்கை கைது செய்தனர்.

வாகனத்தை ஓட்டிய சிதானந்தை கைது செய்யாமல் போலீஸார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று இறந்தவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சிதானந்த் கூறும்போது, விபத்துள்ளான கார் எனக்கு சொந்தமானது. ஆனால், அதை நான் ஓட்டவில்லை. எனது ஓட்டுநர் ஹனுமந்த் சிங் என்பவர் ஓட்டினார் என்று இவர் தெரிவித்துள்ளார்.