கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும் கொரோனா

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் கோவிட் தொற்றால் இதுவரை 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது அலையில் இந்தியாவில் இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 111 கர்ப்பிணிகளுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது.

சதவீத அடிப்படையில் 28.7 சதவீதம் பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது.