நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் காலமானார் !

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா காலமானார்.பாலிவுட்டின் முன்னணி நடிகருள் ஒருவர் அக்ஷய் குமார்.மேலும் இவர் எந்திரன் 2 படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.

கடந்த திங்கள் அன்று அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயார் அருணா பாட்டியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மீண்டு வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்

இந்நிலையில் இன்று அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா மருத்துவமனையில் காலமானார். இதை அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.