கவிஞர் புலமைப்பித்தன் காலமானார் !

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் புலமைப்பித்தன்.உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் புலமைப்பித்தன் காலமாகியுள்ளார்.இவருக்கு வயது 86 .

எம்.ஜி.ஆர் நடித்த பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் இருந்துள்ளார்.கடந்த மாதம் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.