ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.மேலும் இந்த ஊரடங்கில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் கல்லூரிகளும் செப் 1 முதல் தொடங்கப்பட்டன.

மேலும் தமிழகத்தில் இன்று ஊரடங்கு நீடிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.தமிழக முதல்வர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனை இன்று காலை 11 .30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்படுமா என்று தெரியவரும்.