நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு

கிழக்கு கடற்கரை சாலையில் உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துக்கு காரணமாக இருந்ததாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நேற்றிரவு 11.45 மணியளவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற டாடா ஹேரியர் கார், நிலைதடுமாறி செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அதிவேகமாக கார் ஓட்டியது, விபத்துக்குள்ளாக்கியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது 279, 337, 304 என மூன்று பிரிவின்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த பவானிதேவியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.