2 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி 7-ந்தேதி அசாமிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
முன்னதாக வருகிற 6-ந்தேதி அசாம் வரும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 8 லட்சம் தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அசாமில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது. மேலும் கடந்த 15 நாட்களில் அசாமுக்கு பிரதமர் மோடி 2-வது முறையாக செல்வது குறிப்பிடத்தக்கது.



