விவசாய சட்டங்களின் நன்மைகள் குறித்து 25ஆம் தேதி உரை- மோடி

மத்திய அரசின் விவசாய சட்டங்களின் நன்மைகள் குறித்து டிச. 25-ல் விரிவாக விளக்கம் தர இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். நாடுமுழுவதும், இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், அடையாள உண்ணாவிரதங்கள் உள்ளிட்டவை நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடவுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.