குலாம் நபி ஆசாத் ஒரு சிறந்த அரசியல்வாதி – பிரதமர் மோடி !

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் உட்பட 4 உறுப்பினர்களின் பதவி காலம் இன்றோடு நிறைவடைகிறது.மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசிய போது பிரதமர் மோடி கண் கலங்கினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பேசியது,குலாம் நபி ஆசாத் ஒரு சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை.அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பெரும் தொண்டாற்றி வருபவர் என்று புகழ்ந்து பேசினார்.

குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் இருந்தபோது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கியிருந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத் ஆகியோரை நான் தொடர்பு கொண்ட பொது இருவரும் உதவி செய்தனர்.

குலாம் நபி ஆசாத் அடிக்கடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்தார். என்றும் நான் குலாம் நபி ஆசாத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் எனவும் கூறினார்.