விரைவில் பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி !

Highway Tender Scam Chennai High court Reject Edappadi Palaniswami case Tamil Nadu

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் பயிர்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பை வெளியிட்டார்.விரைவில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கைனூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது,வெயில், மழை என்று உழைக்கும் விவசாயிகளின் 16 லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களை கருத்தில் கொண்டு அதிமுக அரசு விவசாய கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.