கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் கரோனா அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது . காலை பத்து மணிக்கு உயர்மட்ட ஆலோசனை நடக்க விருக்கிறது.இதில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.