மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 கரோனா நோயாளிகள் பலி – மும்பை !

கரோனா தொற்று நாடு முழுவதும் அதிகஅளவில் பரவி வரும் நிலையில்,மகாராஷ்டிரா,டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் நேற்று மகாராஷ்டிரா மாநில நாசிக்கில் ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்ற பொது எதிர்பாராதவிதமாக வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோகம் மறைவதற்குள் இன்று மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி 12 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.