முதலமைச்சர், பிரதமர் பதவிகள் என ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசின் தலைவராக தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள பிரதமர் மோடி, புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
2001 அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்த மோடி, தொடர்ந்து 2002, 2007 மற்றும் 2012 – என மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக தேர்வானார்.
மூன்றாம் முறையாக முதலமைச்சராக இருந்த போது, 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி, நாட்டின் 14-வது பிரதமரானார். 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்ற மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வானார். இதன்மூலம், அரசின் தலைவராக மக்கள் சேவையில் இன்று 20வது ஆண்டில் பிரதமர் மோடி அடியெடுத்து வைத்துள்ளார்.