தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி !

டோக்கியோவில் 2020 காண ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய ஹாக்கி அணியின் வெண்கலப் பதக்கம் வென்றது.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது என்று
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை பாராட்டியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கேப்டன் மன்பிரீத் சிங்குக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்,பயிற்சியாளர் கிரஹாம் ரீட் மற்றும் உதவி பயிற்சியாளர் பியூஷ் துபே ஆகியோருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பதிவில்,வரலாற்று சிறப்புமிக்க நாள்! எங்கள் ஹாக்கி அணியைப் பற்றி இந்தியா பெருமை கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.