சூப்பர் …இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் !

டோக்கியோவில் 2020 காண ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.மேலும் இன்று ஆடவர் பிரிவில் 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா, ரஷய் ஒலிம்பிக் கமிட்டியின் ஜாவூர் உகுவேவ் ஆகியோர் மோதினர்.

இதில் ரவிக்குமார் தஹியா, 57 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சுஷில் குமாருக்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரராகவும், ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஐந்தாவது மல்யுத்த வீரராகவும் ரவி ஆகிறார்.

இப்போட்டியின் தொடக்கத்தில் ரஷ்ய வீரர் ஜாவூர் உகுவேவ் சிறப்பாகச் செயல்பட்டு 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.இறுதி கட்டத்தில் 2 புள்ளிகளைப் பெற்ற ரவி 7-4 என கடும் போட்டி அளித்தார்.இறுதியில் ரஷ்ய வீரர் தங்கம் வென்றார்.இந்திய வீரர் ரவி தஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.