காஞ்சிபுரம் களக்காட்டூர் வேளாண்துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு கழிவறைக்கு சென்ற 24 வயதான பெண் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை தொடர்புகொண்டு கேட்டபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.