இன்றுமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்

UGC
இரண்டு பட்டப்படிப்புகள் ஒரே நேரத்தில் அனுமதி

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் வரும் நிலையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று முதல் உயர்கல்வி நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதேநேரம் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளை திறக்கக்கூடாது. அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களை கல்லூரிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.