பட்டா கேட்டு புகார்.. பஞ்சாயத்துக்காரர்களின் மிரட்டல்

பஞ்சாயத்துக்காரர்களின் எச்சரிக்கையை அடுத்து தங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

இதனிடையே அவர்களில் ஒருவரின் வீடு இடிந்து விழுந்த காரணத்தினால் ஓட்டு வீடாக மாற்றி அவர் கட்டியுள்ளார். ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் அவ்வாறு வீடு கட்டக்கூடாது என்றும் அப்படி மீறி கட்டினால் இங்கு வசிக்கும் அனைவரின் வீட்டையும் அகற்றி விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் கோரிக்கை மனு அளித்தனர்.