வெள்ளத்தால் சேதமடைந்த 3500 ஏக்கர் விளைநிலங்கள்

புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மயிலாடுதுறை அருகேவுள்ள 3 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் மூழ்கி நாசமாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேமங்கலம் கூத்தூர் சட்ரஷ் அருகே கரையில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் விவசாய நிலங்களுக்குள் அதிகளவில் புகுந்து வருகிறது. இதனால், 3ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் கழுத்தளவு நீரில் மூழ்கியுள்ளது.

தற்போது பொதுப்பணித் துறையினர் உடைப்பு ஏற்பட்ட பகுதியை மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்து வருகின்றனர். தொடர்ந்து தண்ணீர் வேகமாக புகுந்து வருவதால் சேமங்கலம் ஊராட்சி, வாங்கல், ஆண்டியூர், கண்டமங்கலம், புதுப்பேட்டை ஆலவேளி, கீழையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.