அட இப்படி ஒரு அறிவிப்பா..தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெட்ரோல் இலவசமா !

corona-vaccine-for-12-to-14-yrs-group
கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை பெரிதும் தாக்கியது.மேலும் இதன் பரவலை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள மிக சிறந்த வழி தடுப்பூசி.இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தன.தற்போது தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி சங்கத்தின் சார்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகிறது. மேலும் தடுப்பூசி போட வரும் மக்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க : தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை