வேளாண் சட்டங்களும் எதிராக ராகுல் காந்தி டிராக்டரை ஓட்டி வந்து போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எந்த ஒரு நன்மையையும் அளிக்கப் போவது இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பாராளுமன்ற கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்ட ராகுல்காந்தி, விவசாயிகள் போராடும் பகுதிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து டிராக்டரில் ஏறி பாராளுமன்றத்தை நோக்கி அவர் வந்தார். டிராக்டரை அவரே ஓட்டினார். அருகில் காங்கிரஸ் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் இருந்தனர்.

டெல்லி நகருக்குள் ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். அவர் டிராக்டரில் வந்ததால் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.