பாகிஸ்தான் பிரதமருக்கு கரோனா தொற்று !

கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கி உள்ளது.இதனால் அரசு விதிமுறைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுத்துகிறது.

தற்போது,பாகிஸ்தான் பிரமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஃபைசல் சுல்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஃபைசல் சுல்தான் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று பதவிட்டுள்ளார்.