தேமுதிக துணைச் செயலாளருக்கு கரோனா பாதிப்பு !

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்திவருகின்றனர்.

தமிழகத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ளது.தேமுதிக கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் எல்.கே. சுதீஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.