ராஷ்டிரிய சமிதி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து – தெலுங்கானா !

தெலுங்கானா மாநில பட்டதாரிகளுக்கான சட்டமேலவை தேர்தலில் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் மகள் சுரபி வாணி வெற்றி பெற்றார். இதனால் ராஷ்டிர சமிதி கட்சி அலுவலகத்தில் அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது, பட்டாசு வெடித்ததில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அலுவலகத்தில் தீ பிடித்து கொண்டு தீ மளமளவென எரிய தொடங்கியது.

உடனடியாக அங்கிருந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.