வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் – பாகிஸ்தான் தலைவர் ஒப்புதல் !

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான குற்ற வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.கடந்த மாதம் பாகிஸ்தான் அமைச்சரவை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அவசர சட்ட மசோதாவை உருவாக்கியது. இந்த சட்ட மசோதாவிற்கு இன்று அந்நாட்டு குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து விரைவாக விசாரணை நடைபெறும் என்றும் குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.குற்ற சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்குள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு பாதிக்கப்பட்டவரிடம் விசாரணையை மேற்கொள்ளுமாறு சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.