மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது !

சென்னை கே. கே. நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் கணக்குப் பதிவியல் மற்றும் வணிகப் படிப்புகள் ஆசிரியராக உள்ளவர் ராஜகோபாலன்.அவர் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட இது அணைவரது கவனத்திற்கு வந்தது.

அவர் மீது ஆபாசப் படங்களின் இணையப் பக்கங்களை அனுப்புவது, மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசுவது, மாணவிகளைத் திரைப்படங்களுக்கு அழைப்பது, பின்னிரவில் மாணவிகளுக்கு போன் செய்வது, தேவையில்லாமல் தொடுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இது தொடர்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவுத் துணை ஆணையர் பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி வந்ததாகவும், மாணவிகளின் புகைப்படத்தை அனுப்பச்சொல்வது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும் ஆசிரியர் ராஜகோபாலனே போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.