அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார் !

மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை மிகவும் பிரபலமானது.இது அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி. வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற ஊர்களிலும் கிளைகளை அமைத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 89.இவர் அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.வெங்கடசாமி உடன் பிறந்த சகோதரர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.