பொறியியல் தேர்வு ஜூன் 14 ஆம் தேதி முதல் நடைபெறும்!

cbse-class-12-term-1-announcement
CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மட்டும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தேர்வு குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-ஜூன் 14ஆம் தேதி ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு நடத்தப்படும்.

2017 ரெகுலேஷன்படி இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14-ம் தேதி முதல் தொடங்கும். பணம் கட்டாமல் இருக்கும் மாணவர்கள் வரும் 3-ம் தேதிக்குள் பணம் கட்டலாம்.ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்டத்தேவையில்லை என்று கூறினார்.