தமிழ் மீது இந்தி, சனாதனதர்மம் திணிக்கப்படுவது நிச்சயம்- ப.சிதம்பரம்

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றால் தமிழ் மீது இந்தியும், சனாதனதர்மமும் திணிக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காரைக்குடியில் ப.சிதம்பரம் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் அகில இந்திய அளவிலும், இங்கு உள்ள கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தல். பாஜக தமிழ் நாட்டில் வெல்லக் கூடாது. வெற்றி பெற்றால் காங்கிரஸ் இடத்தை பாஜக தமிழகத்தில் பிடித்து விடும். இடத்தை விட்டு விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.

அதிமுக தமிழ்நாட்டில சில இடங்களில் வெற்றி பெறும், அதிமுக தமிழகத்தில் பலமாகத்தான் இருகிறது. அதிமுக வெற்றி பெறவே பெறாது என்று கூற முடியாது. தென் நாட்டில் காங்கிரஸின் தவறான உத்திகளால் பாஜக கைக்கு கர்நாடகம் சென்று விட்டது.