ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தலிபான்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 100 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறுவது,காந்தஹார் மாகாணத்தில் தலிபான்கள் பொதுமக்கள் 100 பேரைக் கொன்றுள்ளனர். மேலும் பாகிஸ்தானின் ஆணைக்கு இணங்க தலிபான்கள் செயல்படுகின்றனர் என்று குற்றம் சாடியுள்ளார்.

மேலும் பொதுமக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.பிரான்ஸ் 24 வெளியிட்ட வீடியோ காட்சிகளில், தலிபான்கள் வீடுகளை சூறையாடுவதும், அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற அரசாங்க அதிகாரிகளின் வாகனங்களை பறிமுதல் செய்வதும் காணப்பட்டது.