மூளைச் சாவு அடைந்த நபரின் உடலுறுப்புகள் தானம்

புத்தாண்டு அன்று பைக்கில் இருந்து விழுந்த விஷ்னுபாய் படேல் எனும் வணிகர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன்பிறகு அவரது உறவினர் அனுமதியோடு உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

அவரது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டன. இதயமும், நுரையீரலும் சென்னையைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டன. ஆம்புலன்ஸ் மூலம் சூரத்தில் இருந்து சென்னைக்கு (1,618 கிமீ) உடலுறுப்புகள் கொண்டுவரப்பட்டன.

அகமதாபாத்தில் உள்ள சிறுநீரக ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கல்லீரல் வழங்கப்பட்டது. அவரது கண்கள் லோக் திரஷ்டி ஜக்சு வங்கிக்கு அளிக்கப்பட்டது.