தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் !

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்த மழை
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்த மழை

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து காரணமாக கனமழை பெய்து வருகிறது. மேலும் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர், ஆகிய 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக 2 நாட்களுக்கு புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.