நடிகர் லாரன்ஸ் அதிரடி செயல் !

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் ‘ஜெய் பீம் படம்.இந்த படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த படம் இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ‘ஜெய் பீம்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில், செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைப்பேச்சில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது.

செய்யாத குற்றத்திற்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் வாழ்க்கை நிலைக்குறித்துக் கேள்விப்பட்டு துயருற்றேன். அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டித்தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.