எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆனார் – தமிழகம் !

actor-kamalhassan-quit-bigg-boss-ultimate
விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

தமிழக்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனார்.

எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக அதிமுக வில் கடந்த வெள்ளிக்கிழமை அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

ஆனால் அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை.இன்று காலை 9.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைறெ்றது.

இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அவரது தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.