கரோனா சிகிச்சைக்கு 2 கோடி நன்கொடை அளித்த அமிதாப் பச்சன் !

இந்தியாவை கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிர்பலி அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் விதமாக இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியின் ஸ்ரீ குரு தேஜ்பகதூர் கோவிட் சிகிச்சை மையத்துக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

அகாலிதளக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மஜீந்தர் சிங் சிர்ஸா தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் அமிதாப் பச்சனின் இந்த ரூ.2 கோடி நன்கொடை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை ஏற்பாடு ஆகியவற்றை நன்றியுடன் அறிவித்தார்.

ரூ.2 கோடி நன்கொடை அளித்த அமிதாப், சீக்கியர்கள் லெஜண்ட்கள், அவர்கள் சேவைக்கு வணங்குகிறேன் என்று அமிதாப் கூறியதையும் சிர்சா பதிவிட்டுள்ளார்.