ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பள்ளி முன்பு நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது.இந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த பள்ளி மாணவிகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் காரணம் என ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இதற்கு தலிபான் தீவிரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று உலகை உலுக்கும் இந்த சூழலில் இந்த கொடூர சம்பவம் அனைவரையும் தாக்கியுள்ளது.