தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு இருப்பதால் , அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்குமாறு, மின் வாரியத்தற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனால் மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.