பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25ஆம் தேதி முதல் தொடக்கம் – தமிழகம் !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை தாக்கி வருகிறது.மக்கள் முகக்கவசம் மற்றும் சமூகஇடைவேளை கடைபிடிக்க அரசு வலிவுறுத்துகிறது.தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த கரோனா காலத்தில் தள்ளிப்போன பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் 25ஆம் தேதி முதல் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கம் 24 ம் தேதி வரை இருப்பதால் அடுத்த நாள் தேர்வுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த அறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழங்களே வெளியிடும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பருவத்தேர்வ சரியாக நடத்தப்படாததால், மீண்டும் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.