வைரமுத்துவுக்கு விருது வழங்குவதற்கு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஓ.என்.வி விருதுகுழு தெரிவித்துள்ளது.
லையான நடிகை பார்வதியும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘”ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது” எனக் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், வைரமுத்து விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.